/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அரசு கலைக் கல்லுாரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
அரசு கலைக் கல்லுாரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : அக் 28, 2024 05:01 AM
திருவாடானை : திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் மூன்றாம் பாலினத்தோர் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கல்லுாரி முதல்வர் பழனியப்பன் தலைமை வகித்தார். திருவாடானை நீதிமன்ற வட்ட சட்ட குழுவுடன் இணைந்து மூன்றாம் பாலினத்தவர் நம்மில் ஒருவர் என்ற தலைப்பில் திருவாடானை நீதிபதி மணிஷ்குமார் சிறப்புரை ஆற்றினார்.
நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் மணிமேகலை வரவேற்றார். கணிதத் துறை தலைவர் செல்வம் பேசினார். மூன்றாம் பாலினத்தோர் சந்திக்கும் சிக்கல்கள் அவர்களுக்கான சட்டங்கள் குறித்து வக்கீல் குருமூர்த்தி பேசினார். ஆங்கிலத்துறை உதவி பேராசிரியர் சுரேஷ் நன்றி கூறினார்.
வட்ட சட்டக் குழுவின் தன்னார்வலர் கோட்டைசாமி ஏற்பாடுகளை செய்திருந்தார்.

