நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே தேரிருவேலி ராவுத்தர் சாஹிப் மேல்நிலைப்பள்ளியில் போதைப் பொருள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
தலைமையாசிரியர் கரீம்கனி தலைமை வகித்தார். எஸ்.ஐ., முனீஸ்வரன் முன்னிலை வகித்து மது, போதை பொருள் பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், பெற்றோர், உறவினர்கள் யாரேனும் மது அருந்தினால் அவர்களை தடுக்க வேண்டும் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.முகாமில் மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

