/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அய்யனார் கோயில் குதிரை எடுப்பு விழா
/
அய்யனார் கோயில் குதிரை எடுப்பு விழா
ADDED : அக் 18, 2025 03:43 AM
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே விளங்குளத்துார் கிராமத்தில் அய்யனார் கோயில் குதிரை எடுப்பு விழா, வாழவந்தாள் அம்மன் பொங்கல் விழா நடந்தது.
புல்வாய்க்குளம் கிராமத்தில் பருவமழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி அய்யனார் கோயில் குதிரை எடுப்பு விழா நடந்தது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு விளங்குளத்துார் அருகே உள்ள அம்மன் கோயிலில் பிடிமண் வழங்கப்பட்டது.
கிராம மக்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர். தயார் செய்து வைக்கப்பட்ட குதிரைகள், கருப்பண்ணசாமி, ராக்கச்சி, பேச்சியம்மன், பைரவர், சப்த கன்னிமார்கள் உள்ளிட்ட தவழும் பிள்ளைகளை கிராம மக்கள் முக்கிய விதிகளில் ஊர் வலமாக தூக்கி வந்தனர்.
கடந்த ஆண்டு விளைந்த தானியங்களை வைத்து கண் திறப்பு செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. அய்யனார் கோயிலில் வைத்து வழிபட்டனர். பக்தர்கள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு சிலாகுத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவில் முதுகுளத்துார் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.