ADDED : பிப் 19, 2024 11:26 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி திருவாடானை பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு பா.ம.க., வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருவாடானை அருகே ஓரியூர் கண்மாயில் ஆக்கிரமிப்பை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் அகற்ற நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து பா.ம.க., சார்பில் திருவாடானை பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் சந்தனதாஸ் தலைமை வகித்தார். அதனை தொடர்ந்து திருவாடானை தாலுகா அலுவலகத்தில் சமாதானக் கூட்டம் தாசில்தார் கார்த்திகேயன் தலைமையில் நடந்தது.
அதில் கண்மாய் ஆக்கிரமிப்புகள் பிப்.27 க்குள் அகற்றப்படும் என்று பொதுப்பணித்துறை அலுவலர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

