ADDED : பிப் 15, 2024 05:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருநாழி: கமுதி வட்டார வேளாண் உதவி இயக்குனர் சிவராணி கூறுகையில், கமுதி வட்டார விவசாயிகளுக்கு வறட்சியால் நெற்பயிர் பாதிக்கப்பட்டதற்காக நிவாரணத் தொகை வழங்கப்படுகிறது.
நிவாரணத் தொகைக்கான வங்கி கணக்கு எண் தவறாக இருந்தால் தனி நபருக்கு வரவு வைக்கப்படாமல் தொகை திரும்பி வந்துள்ளது. எனவே வறட்சி நிவாரணத் தொகை பெறாத விவசாயிகள் சிட்டா, வங்கி கணக்கு புத்தகத்துடன் கமுதி வேளாண் விரிவாக்க மையத்தை அணுகலாம் என தெரிவித்தார்.

