நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: திருவாடானை அருகே சிவகங்கை தேவஸ்தானத்திற்கு சொந்தமான திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் நேற்று ஒன்பதுபிரார்த்தனை உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை பொருட்கள் கணக்கிடும் பணிகள் நடந்தது.
இதில் ரூ.19 லட்சத்து 53 ஆயிரத்து 936 பணம், தங்கம் 217.100 கிராம், வெள்ளி 465 கிராம் கிடைத்தது.
ஹிந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் ஞானசேகரன், தேவஸ்தான மேலாளர் இளங்கோ, சிரஸ்தார் சுப்பிரமணியன், கண்காணிப்பாளர் செந்தில்குமார், கவுரவ கண்காணிப்பாளர் சுந்தர்ராஜன் மற்றும் கிராமத்தினர் கலந்து கொண்டனர்.