/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கடற்கரையில் துாய்மை விழிப்புணர்வு ஊர்வலம்
/
கடற்கரையில் துாய்மை விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : பிப் 12, 2024 04:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழக்கரை: கீழக்கரை முகமது சதக் பாலிடெக்னிக் கல்லுாரி சார்பில், கடற்கரை துாய்மையை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
கல்லுாரி முதல்வர் சேக்தாவூத் ஊர்வலத்தை துவக்கி வைத்தார். கீழக்கரை நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று கடற்கரையை சென்றடைந்தது. பேராசிரியர் மங்களேஸ்வரி, என்.சி.சி., நேவல் படை மாணவர்கள் கடற்கரையில் துாய்மை பணியில் ஈடுபட்டனர்.
பேராசிரியர்கள் கண்ணன், ராஜேஷ் கண்ணா, மருதாச்சலமூர்த்தி, என்.எஸ்.எஸ்., அலுவலர் வினோத் பங்கேற்றனர்.