/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மீனவர் குடும்பத்திற்கு நிவாரணம் கோரி பிச்சை எடுக்கும் போராட்டம்
/
மீனவர் குடும்பத்திற்கு நிவாரணம் கோரி பிச்சை எடுக்கும் போராட்டம்
மீனவர் குடும்பத்திற்கு நிவாரணம் கோரி பிச்சை எடுக்கும் போராட்டம்
மீனவர் குடும்பத்திற்கு நிவாரணம் கோரி பிச்சை எடுக்கும் போராட்டம்
ADDED : டிச 31, 2024 04:23 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் ஆற்றங்கரையில் கடலில் மூழ்கி பலியான மீனவரின் குடும்பத்திற்கு அரசு நிவராணம் வழங்க வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் பிச்சை எடுக்கும் போராட்டம் நடந்தது.
ராமநாதபுரம் அருகே இரட்டையூருணி ஊராட்சி எம்.பி.கே. வலசையை சேர்ந்த மீனவர் முனியாண்டி 45. இவர் 2021 ஜூன் 16ல் ஆற்றங்கரை கடலுக்கு செல்லும் நீரோடையில் மீன்பிடிக்க சென்ற போது சேற்றில் சிக்கி இறந்தார். அவரது பிரேத பரிசோதனை அறிக்கை கிடைக்காமல் அரசு நிவாரணம் பெற முடியாமல் அவரது குடும்பத்தினர் 3 ஆண்டுகளாக சிரமப்படுகின்றனர்.
இதை கண்டித்து முனியாண்டி மனைவி வசந்தா மற்றும் குடும்பத்தினர், கடல் தொழிலாளர் சங்கத்தினர் நேற்று கலெக்டர் அலுவலக வளாகத்தில் பிச்சை எடுக்கும் நுாதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வசந்தா கூறுகையில், எனது கணவர் உடல் உறுப்புகள் சேகரம் குறித்த பிரேத பரிசோதனை இறுதி அறிக்கை ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் இருந்து வழங்கவில்லை. இதற்காக பலமுறை முயற்சி செய்தும் கிடைக்கவில்லை. மீன்வளத்துறை அதிகாரிகளிடம் கூறிவிட்டேன். எங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.
கடல் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கருணாமூர்த்தி கூறுகையில், பிச்சை எடுக்கும் போராட்டத்தை அடுத்து மீன்வளத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில், முனியாண்டியின் உடலுறுப்புகள் பிரேத பரிசோதனை அறிக்கை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் உடனடியாக வழங்குவதாக கூறியுள்ளதாகவும், அதன் பிறகு அரசு நலத்திட்ட உதவிகளை கிடைக்க ஏற்பாடு செய்வதாக மீன்துறை அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர் என்றார்.