ADDED : மார் 14, 2024 10:53 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கமுதி, - -கமுதி அருகே முஸ்டக்குறிச்சி பெத்தனாட்சி அம்மன் கோயில் மாசிக்களரி விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. இதில் ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, துாத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் இருந்து 24க்கும் மேற்பட்ட மாடுகள், சாரதிகள் கலந்து கொண்டனர்.
பெரியமாடு, சின்னமாடு என இரண்டு பிரிவாக இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. முதல் நான்கு இடங்களை பிடித்த மாடுகள், சாரதிகளுக்கு ரொக்கப்பணம், குத்து விளக்கு கிராமத்தின் சார்பில் வழங்கப்பட்டது.

