sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ஏலமிடலாமே[ துருப்பிடித்து வீணாகும் கழிவு செய்யப்பட்ட அரசு வாகனங்கள்

/

ஏலமிடலாமே[ துருப்பிடித்து வீணாகும் கழிவு செய்யப்பட்ட அரசு வாகனங்கள்

ஏலமிடலாமே[ துருப்பிடித்து வீணாகும் கழிவு செய்யப்பட்ட அரசு வாகனங்கள்

ஏலமிடலாமே[ துருப்பிடித்து வீணாகும் கழிவு செய்யப்பட்ட அரசு வாகனங்கள்


ADDED : அக் 11, 2025 03:54 AM

Google News

ADDED : அக் 11, 2025 03:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்கள், மீன்வளத்துறை, கல்வித்துறை உள்ளிட்ட பல அரசு அலுவலகங்களில் ஏராளமான கழிவு செய்யப்பட்ட ஜீப், கார் உள்ளிட்ட பழைய அரசு வாகனங்கள் பல ஆண்டுகளாக நிறுத்தப்பட்டு வெயில், மழையில் துருப்பிடித்து வீணாகின்றன. இவற்றை ஏலமிடாமல் அப்படியே விட்டுள்ளனர்.

அரசுத்துறைகளில் பணிபுரியும் உயர் அதிகாரிகளுக்கு ஜீப், கார் போன்ற வாகனங்கள் வழங்கப்படுகின்றன. அந்த வாகனங்கள் பெயரளவிலான பராமரிப்பு காரணமாக அடிக்கடி பழுதாகி விடுகின்றன. மேலும் 10 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டால் அந்த வாகனங்களை தொடர்ந்து இயக்காமல் அவர்களது அலுவலக வளாகத்தில் அப்படியே நிறுத்தி வைக்கின்றனர்.

குறிப்பாக கலெக்டர் அலுவலக வளாகம், ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகம், மீன்வளத்துறை, மகளிர் திட்டம் வளாகம், கிராமப்புற குடிநீர் வாரிய அலுவலக வளாகம் உள்ளிட்ட இடங்களில் பயன்பாடு இல்லாத வாகனங்களை நிறுத்தி வைத்துள்ளனர். இவை மழையில் நனைந்து துருப்பிடித்த நிலையில் செடி, கொடிகள் படர்ந்து புதர் மண்டி காணப்படுகின்றன.

சில வாகனங்கள் பாம்பு, விஷபூச்சிகள் தங்கும் இடமாக மாறியுள்ளன. இவற்றின் உதிரி பாகங்களை சிலர் திருடி செல்லவதாகவும் மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் பயன்பாடில்லாமல் பல ஆண்டுகளாக நிறுத்தி வைத்துள்ள பழைய வாகனங்களை கணக்கெடுப்பு செய்து அவற்றை முறையாக ஏலம் விட்டு அரசு கணக்கில் சேர்க்க கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.----






      Dinamalar
      Follow us