/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இலங்கை போலீஸ்காரருக்கு எதிரான வழக்கு செப்.3க்கு ஒத்திவைப்பு
/
இலங்கை போலீஸ்காரருக்கு எதிரான வழக்கு செப்.3க்கு ஒத்திவைப்பு
இலங்கை போலீஸ்காரருக்கு எதிரான வழக்கு செப்.3க்கு ஒத்திவைப்பு
இலங்கை போலீஸ்காரருக்கு எதிரான வழக்கு செப்.3க்கு ஒத்திவைப்பு
ADDED : ஆக 28, 2025 02:22 AM
ராமநாதபுரம்:போதைப்பொருட்களை திருடிய வழக்கில் தலைமறைவாகி தமிழகத்திற்கு தனுஷ்கோடி வழியாக வந்த இலங்கை போலீஸ்காரர் பிரதீப் குமார் பண்டாராவுக்கு 32, எதிரான வழக்கு விசாரணையை செப்., 3க்கு ராமநாதபுரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
இலங்கையில் கொழும்பு புறநகர் பகுதியான சபுகஸ்கந்த பகுதியில் உள்ள மரக்கடையில் இருந்து 2020-ல் இலங்கை போலீசார் 23 கிலோ ஹெராயின் போதைப்பொருட்களை கைப்பற்றினர். இதில் அனுர குமார என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.
இவர் இலங்கை துறைமுக போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரியும் போலீஸ்காரர் பிரதீப் குமார் பண்டாராவின் அண்ணன் ஆவார். இவர் ஸ்டேஷனில் போலீசார் கைப்பற்றி வைத்திருந்த போதைப்பொருட்களை திருடி தன் சகோதரர் மூலம் கொடுத்திருக்கலாம் என இலங்கை போலீசார் சந்தேகித்தனர்.
இதனால் அவரை அந்நாட்டு போலீசார் விசாரிக்க முடிவு செய்தனர். இதை அறிந்த பிரதீப் குமார் பண்டாரா தமிழகத்திற்கு தப்பி வந்தார்.
அவரை மண்டபம் கடலோர போலீசார் கைது செய்து சென்னை பூந்தமல்லி சிறையில் அடைத்தனர். தற்போது இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டு விசாரணை நடக்கிறது.
சிறையில் இருந்த பிரதீப்குமார் பண்டாரா ஜாமின் பெற்று திருச்சி முகாமிற்கு மாற்றப் பட்டார்.
இவ்வழக்கு ராமநாதபுரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி மெகபூப் அலிகான் முன்னிலையில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.
அரசு தரப்பில் அரசு தலைமை வழக்கறிஞர் கார்த்திகேயன் ஆஜரானார். பிரதீப் குமார் பண்டாரா ஆஜராகி தன் தரப்பு வாதத்தை தெரிவித்தார். இதையடுத்து அடுத்தகட்ட விசாரணையை செப்.,3க்கு நீதிபதி ஒத்திவைத்தார்.