ADDED : டிச 06, 2025 12:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம்: திருப்பரங்குன்றம் மலை தீபத் துாணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் இரவு ஆர்.எஸ். மங்கலம் ஒன்றிய தலைவர் வடிவேலன் தலைமையில் பா.ஜ.க.,வினர் திருச்சி- ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில், சாலை மறியல் செய்தனர்.
அதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 22 பேர் மீது ஆர்.எஸ். மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

