sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ரூ29.85 லட்சம் கையாடல் சகோதரர்கள் மீது வழக்கு

/

ரூ29.85 லட்சம் கையாடல் சகோதரர்கள் மீது வழக்கு

ரூ29.85 லட்சம் கையாடல் சகோதரர்கள் மீது வழக்கு

ரூ29.85 லட்சம் கையாடல் சகோதரர்கள் மீது வழக்கு


ADDED : டிச 04, 2024 01:16 AM

Google News

ADDED : டிச 04, 2024 01:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் டிராவல்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்த சகோதரர்கள் ரூ.29.85 லட்சம் கையாடல் செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கீழக்கரை சேரன் தெருவை சேர்ந்தவர் சதக்கத்துல்லா மகன் முகமது நபீல் 27. இவர் கீழக்கரை வடக்குத்தெருவில் 2018 முதல் 'அபியா டூர்ஸ் அன் டிராவல்ஸ்' நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் 2020ல் கீழக்கரையை சேர்ந்த தாஹிர் உசேன் மகன் முகமது சுபைதீன், கணக்காளராக பணியில் சேர்ந்தார். அதன் பின் 2021 ல் முகமது நபீல் ஆந்திராவில் சட்டக்கல்லுாரியில் படிக்க சென்றார். அப்போது தனது டிராவல்ஸ் நிறுவனத்தின் அனைத்து பொறுப்புகளையும் முகமது சுபைதீனிடம் ஒப்படைத்து சென்றார். நிறுவனத்தின் வங்கி கணக்கு உட்பட அனைத்தும் முகமது சுபைதீன் பொறுப்பில் இருந்தது.

2023 ல் முகமது சுபைதீன் தனது தம்பியான பரூக்மரைக்காவையும் டிராவல்ஸ்சில் பணிக்கு சேர்த்துக்கொண்டார். இந்நிலையில் வாடிக்கையாளர்களிடம் இருந்து சேவை குறைபாடு இருப்பதாகவும், பணம் சரியாக செலுத்தப்படவில்லை என்ற புகார்கள் தொடர்ந்து வந்தது.

இதையடுத்து முகமது நபீல், 2023 ஏப்., முதல் 2024 ஆக., வரையிலான நிறுவன கணக்குகளை ஆய்வு செய்துள்ளார். இதில் முகமது சுபைதீன், பரூக்மரைக்கா இணைந்து 29 லட்சத்து 85 ஆயிரத்து 453 ரூபாய் கையாடல் செய்திருப்பதும், ஹஜ் பயணம் செல்லும் பயணிகளிடம் பணம் பெற்றுக்கொண்டு டிக்கெட் புக் செய்யாததும் தெரிய வந்தது.

இது குறித்து கீழக்கரை போலீசில் அவர் புகார் அளித்தார். முகமது சுபைதீன், பரூக்மரைக்கா மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us