sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 21, 2025 ,ஐப்பசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கள்ளப்படகில் தமிழகத்திற்கு வந்த இலங்கை  போலீஸ்காரர் வழக்கு செப்.8க்கு ஒத்திவைப்பு

/

கள்ளப்படகில் தமிழகத்திற்கு வந்த இலங்கை  போலீஸ்காரர் வழக்கு செப்.8க்கு ஒத்திவைப்பு

கள்ளப்படகில் தமிழகத்திற்கு வந்த இலங்கை  போலீஸ்காரர் வழக்கு செப்.8க்கு ஒத்திவைப்பு

கள்ளப்படகில் தமிழகத்திற்கு வந்த இலங்கை  போலீஸ்காரர் வழக்கு செப்.8க்கு ஒத்திவைப்பு


ADDED : செப் 04, 2025 04:07 AM

Google News

ADDED : செப் 04, 2025 04:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: போதைப்பொருட்களை திருடிய வழக்கில் தலைமறைவாகி கள்ளப் படகில் தனுஷ்கோடி வந்த இலங்கை போலீஸ்காரர் பிரதீப் குமார் பண்டாரா 32, மீதான வழக்கு விசாரணையை செப்., 8க்கு ராமநாதபுரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதி மன்றம் ஒத்தி வைத்தது.

இலங்கையில் கொழும்பு புறநகர் பகுதியான சபுகஸ்கந்த பகுதியில் உள்ள மரக்கடையில் இருந்து 2020ல் இலங்கை போலீசார் 23 கிலோ ஹெராயின் போதைப்பொருட்களை கைப்பற்றினர். இதில் அனுரகுமார என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர், இலங்கை துறைமுக போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரியும் போலீஸ் காரர் பிரதீப் குமார் பண்டாராவின் அண்ணன் ஆவார். இவர் ஸ்டேஷனில் போலீசார் கைப்பற்றி வைத்திருந்த போதைப்பொருட்களை திருடி தன் சகோதரர் மூலம் கொடுத்திருக்கலாம் என இலங்கை போலீசார் சந்தேகித்தனர்.

இதனால் அவரை அந்நாட்டு போலீசார் விசாரிக்க முடிவு செய்தனர். இதையறிந்த பிரதீப் குமார் பண்டாரா கள்ளப்படகில் ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி வழியாக தமிழகத்திற்கு தப்பி வந்தார். அவரை மண்டபம் கடலோர போலீசார் கைது செய்து சென்னை பூந்தமல்லி சிறையில் அடைத்தனர். தற்போது இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டு விசாரணை நடக்கிறது.

சிறையில் இருந்த பிரதீப்குமார் பண்டாரா ஜாமின் பெற்று திருச்சி முகாமிற்கு மாற்றப்பட்டார். இவ்வழக்கு ராமநாத புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி (பொ) கவிதா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. பிரதீப்குமார் பண்டாரா ஆஜராகவில்லை. இதையடுத்து அடுத்தகட்ட விசாரணையை செப்.,8க்கு நீதிபதி ஒத்திவைத்தார்.






      Dinamalar
      Follow us