sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ராமநாதபுரத்தில் காவிரி குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்: சீரமைக்க வலியுறுத்தல்

/

ராமநாதபுரத்தில் காவிரி குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்: சீரமைக்க வலியுறுத்தல்

ராமநாதபுரத்தில் காவிரி குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்: சீரமைக்க வலியுறுத்தல்

ராமநாதபுரத்தில் காவிரி குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்: சீரமைக்க வலியுறுத்தல்


ADDED : அக் 30, 2025 03:46 AM

Google News

ADDED : அக் 30, 2025 03:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகரில் பாதாள சாக்கடை பாரமரிப்பு பணி மற்றும் ஜல்-ஜீவன் திட்டத்தில் பணியின் போது குழாய் சேதமடைந்து காவிரி கூட்டு குடிநீர் வீணாவது வாடிக்கையாகி யுள்ளது.

அவ்விடங்களை கண்டறிந்து உடன் சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் பிரச்னையை தீர்க்க 2009 முதல் காவிரி கூட்டுகுடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ராமநாதபுரம், ராமேஸ் வரம், பரமக்குடி, கீழக்கரை ஆகிய நகராட்சிகள், பேரூராட்சி, கிராமப்பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

இந்நிலையில் ராமநாதபுரம் நகரில் பாதாள சாக்கடை பராமரிப்பு பணி, ஜல்-ஜீவன் திட்டத்தில் வீடு தோறும் இணைப்பு வழங்கும் பணிக்காக குழி தோண்டும் போது குழாய் சேதமடைந்து காவிரி குடிநீர் வீணாகிறது.

தற்போது லேத்தம்ஸ் பங்களா ரோட்டில் பஜார் போலீஸ் ஸ்டேஷன் அருகே கடந்த சில நாட்களாக குழாய் உடைந்து குடிநீர் வீணாக ரோட்டில் ஓடுகிறது.

இதே போன்று குடிநீர் வீணாகும் இடங்களை கண்டறிந்து உடனடியாக சீரமைக்க நகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us