/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இ.நெடுங்குளத்தில் 'சிசிடிவி' அமைப்பு
/
இ.நெடுங்குளத்தில் 'சிசிடிவி' அமைப்பு
ADDED : ஜூலை 05, 2025 11:12 PM
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே இ.நெடுங்குளத்தில் கிராம மக்களின் சொந்த முயற்சியில் குற்ற சம்பவங்களை தடுப்பதற்காக 'சிசிடிவி' கேமரா அமைக்கப்பட்டது.
இ.நெடுங்குளத்தில் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் குற்ற சம்பவங்களை தடுப்பதற்காகவும், போலீசுக்கு உதவியாகவும் கிராமம் சார்பில் 'சிசிடிவி' கேமரா அமைக்கப்படும் என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து கிராமம் முழுவதும் கண்காணிப்பதற்காக 5 'சிசிடிவி' கேமரா அமைக்கப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா, கண்காணிப்பு அறையை முதுகுளத்துார் டி.எஸ்.பி., சண்முகம் திறந்து வைத்தார். உடன் இன்ஸ்பெக்டர் செல்வராஜ், கிராம மக்கள் பலர் பங்கேற்றனர்.