ADDED : ஜன 30, 2024 11:16 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் பிப்.1 முதல் 14 வரை கோழிக்கழிச்சல் தடுப்பூசி முகாம் நடக்கிறது.
முகாமில் 2 லட்சத்து 77 ஆயிரம் தடுப்பூசி மருந்துகள் பயன்படுத்தப்படவுள்ளது.
மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில் கிராமங்களில் உள்ள கால்நடை மருந்தகங்களில் முகாம் ஏற்பாடுகளை செய்கின்றனர்.
கோழி வளர்க்கும் பொது மக்கள் முகாமில் பங்கேற்று தடுப்பூசி செலுத்தி ஆலோசனை பெறலாம் என கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.