ADDED : அக் 07, 2024 04:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: திருவாடானை அருகே ஓரியூர் புனித அருளானந்தர் சர்ச்சில் ஆண்டுதோறும் மதுரை மறைமாவட்ட கிறிஸ்தவர்கள் திருயாத்திரையாக வந்து வழிபாடு செய்வார்கள். நேற்று நடந்த திருயாத்திரை விழாவிற்கு மறைமாவட்ட பிஷப் லுார்துஆனந்தம் தலைமை வகித்தார்.
அதனை தொடர்ந்து சிறப்பு திருப்பலி நடந்தது. உலக அமைதி வேண்டியும், நல்ல மழை பெய்யவும், விவசாயம் செழிக்கவும் வேண்டி சிறப்பு திருப்பலி நடந்தது. ஏராளமானோர் பங்கேற்றனர்.

