/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சூப்பர் ரிப்போர்ட்டருக்கு வந்த புகார்கள்
/
சூப்பர் ரிப்போர்ட்டருக்கு வந்த புகார்கள்
ADDED : நவ 27, 2025 06:28 AM

சுற்றுச்சூழல் சீர்கேடு
திருப்புல்லாணியில் இருந்து உத்தரகோசமங்கை செல்லும் ரோட்டோரத்தில் குப்பையை கொட்டுவதால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. எனவே குப்பை கொட்டுவதை தடுத்து எரிப் பவர்கள் மீது ஊராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- என்.கணேசன், உத்தரசோசமங்கை
தெருநாய்கள் தொல்லை
ராமநாதபுரம் பெரியார் நகரில் ரோட்டில் திரியும் நாய்களால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற் படுகிறது. நாய்களை கட்டுப்படுத்த நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சி.மேனகா , ராமநாதபுரம்.
குளமாகும் ரோடு
மழை பெய்தால் பட்டணம்காத்தான் ஓம் சக்திநகர் ரோட்டில் தண்ணீர் தேங்குகிறது. தடையின்றி தண்ணீர் செல்ல அதிகாரிகள் நட வடிக்கை எடுக்க வேண்டும்.
- ஏ.சுமதி, பட்டணம்காத்தான்
பன்றிகளால் தொல்லை
டி-பிளாக் ரோடு குடியிருப்பு பகுதியில் பன்றிகள் திரிவதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. அவற்றை அப்புறப்படுத்த அதிகாரிகள் நட வடிக்கை எடுக்க வேண்டும்.
- எஸ். பிரபு, சக்கரக்கோட்டை
எரியாத விளக்குகளால் ஆபத்து
ராமநாதபுரம் நெடுஞ்சாலையில் சென்டர் மீடியனில் உள்ள விளக்குகள் அடிக்கடி பழுதாகி விடுவதால் இரவில் வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம் உள்ளது. பழுதான மின் விளக்குகள் உடனுக்குடன் சரிசெய்ய வேண்டும்.
-எம். சாகுல் அமீது, ராமநாதபுரம்

