/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பேரூராட்சி மாற்றுத்திறனாளி கவுன்சிலர் பொறுப்பேற்பு
/
பேரூராட்சி மாற்றுத்திறனாளி கவுன்சிலர் பொறுப்பேற்பு
பேரூராட்சி மாற்றுத்திறனாளி கவுன்சிலர் பொறுப்பேற்பு
பேரூராட்சி மாற்றுத்திறனாளி கவுன்சிலர் பொறுப்பேற்பு
ADDED : நவ 27, 2025 06:27 AM

தொண்டி: தொண்டி பேரூராட்சியில் மாற்றுத் திறனாளி நியமன கவுன்சிலராக ராவுத்தர் மைதீன் பொறுப்பேற்றார். உள்ளாட்சி அமைப்புகளில் மாற்று திறனாளி களை கவுன் சிலர்களாக நியமிக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
அதன்படி தொண்டி பேரூராட்சியில் மாற்றுத் திறனாளிகளுக்கான நியமன கவுன்சிலர் பதவிக்கு 37 மாற்றுத் திறனாளிகள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதில் தொண்டி சர்க்கரை பாபா தெருவை சேர்ந்த ராவுத்தர் மைதீன் 34, கவுன்சிலராக நியமனம் செய்யப்பட்டார்.
பேரூராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்த பதவி ஏற்பு நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் ஷாஜகான்பானு தலைமை வகித்தார். செயல் அலுவலர் பாலசுப்பிரமணியன் முன்னிலையில் பேரூராட்சியின் மாற்று திறனாளி கவுன்சிலராக ராவுத்தர்மைதீன் உறுதிமொழி வாசித்து பொறுப்பேற்றார். அவருக்கு கவுன்சிலர்கள், ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

