ADDED : டிச 06, 2025 05:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்., கட்சி வரும் சட்டசபை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து பேசு வதற்காக ஐவர் குழு முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசி வருகின்றனர்.
காங்கிரசுக்கு சாதகமான 39 தொகுதிகளை ஒதுக்குமாறு காங்., சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த 39 தொகுதிகளில் திருவாடானை தொகுதியும் அடங்கும்.
இது குறித்து திருவாடானை காங்., தொண்டர்கள் கூறுகையில், திருவாடானை தொகுதி காங்., கோட்டை என்று வர்ணிக்கப்படும் அளவிற்கு வெற்றி பெற்று வருகிறது.
எனவே மீண்டும் இத்தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்க காங்., குழுவினர் வலியுறுத்தியுள்ளது உற்சாகமாக உள்ளது என்றனர்.

