/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தொடர் விடுமுறை: காரங்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்
/
தொடர் விடுமுறை: காரங்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்
தொடர் விடுமுறை: காரங்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்
தொடர் விடுமுறை: காரங்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்
ADDED : ஆக 17, 2025 11:05 PM

திருவாடானை : தொண்டி அருகே காரங்காடு கடற்கரை சதுப்பு நிலக்காடுகளை உள்ளடக்கி அமைந்துள்ளது. இயற்கை தந்த கொடையாக அனைவருடைய மனதை கவரும் வகையில் மாங்குரோவ் காடுகள் அடர்த்தியாக உள்ளன. இப்பகுதி சுற்றுலா தலமாக அறிவிக்கபட்டதால் வெளிமாவட்டங்களிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
சுற்றுலா பயணிகளை அழைத்து கடலுக்குள் சென்று சுற்றி காட்டுவதற்காக வனத்துறையினர் சார்பில் படகு சவாரி, கயாக்கிங் எனப்படும் துடுப்பு சவாரி ஏற்பாடு செய்யபட்டுள்ளது.
சுதந்திரதின விழா என தொடர் அரசு விடுமுறை என்பதால் கடந்த மூன்று நாட்களாக சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. அவர்கள் படகில் உற்சாகமாக சென்றனர்.