sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கூட்டுறவுத்துறை ஊழியர் ஆர்ப்பாட்டம்

/

கூட்டுறவுத்துறை ஊழியர் ஆர்ப்பாட்டம்

கூட்டுறவுத்துறை ஊழியர் ஆர்ப்பாட்டம்

கூட்டுறவுத்துறை ஊழியர் ஆர்ப்பாட்டம்


ADDED : அக் 13, 2025 05:29 AM

Google News

ADDED : அக் 13, 2025 05:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம் :தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கம் சார்பில் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆறு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கம் மாநில செயற்குழு உறுப்பினர் ஜெயசங்கர் தலைமை வகித்தார்.

மாவட்டத் துணை தலைவர் திருலோக சந்தர், மாவட்ட பொருளாளர் மணிகண்டன் முன்னிலை வகித்தனர். மாநில துணைத் தலைவர் விஜயராமலிங்கம் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

இதில் கூட்டுறவுத்துறை அலுவலகங்களில் பணி நேரம் முடிந்து மாலை 6:00 மணிக்கு மேல் கூகுள் மீட் மூலம் காணொலி வாயிலாக ஆய்வுக்கூட்டம் நடத்தப்படுகிறது.

இது இரவு வரை நீடிப்பதால் அலுவலர்கள் தங்கள் பணி நேரத்தை கடந்து வேலை செய்ய வேண்டியுள்ளது. தனியார் தொழில் முனைவோர் மூலம் நடத்தப்படும் முதல்வர் மருந்தகங்களுக்கு கூட்டுறவு சார்ப்பதிவாளர்களை பயன்படுத்த வேண்டும்.

அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்காமல் தாயுமானவர் திட்டத்தை இரு தினங்களில் செயல்படுத்த வேண்டும் என அழுத்தம் கொடுப்பதை கைவிட வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர். முத்துலதா நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us