sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பரமக்குடி ஐந்து முனை ரோட்டில் ஆபத்தை ஏற்படுத்தும் பஸ் ஸ்டாப்

/

பரமக்குடி ஐந்து முனை ரோட்டில் ஆபத்தை ஏற்படுத்தும் பஸ் ஸ்டாப்

பரமக்குடி ஐந்து முனை ரோட்டில் ஆபத்தை ஏற்படுத்தும் பஸ் ஸ்டாப்

பரமக்குடி ஐந்து முனை ரோட்டில் ஆபத்தை ஏற்படுத்தும் பஸ் ஸ்டாப்


ADDED : அக் 13, 2025 05:29 AM

Google News

ADDED : அக் 13, 2025 05:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரமக்குடி : பரமக்குடி ஐந்து முனை ரோடு பகுதியில் ஆபத்தான முறையில் பஸ்ஸ்டாப் செயல்படும் நிலையில் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பரமக்குடி நகராட்சியில் ஐந்து முனை ரோடு பிரதானமாக உள்ளது. இங்கு மதுரை, ராமநாதபுரம், இளையான்குடி, முதுகுளத்துார் மற்றும் நகர் பகுதி செல்லும் பாதைகள் உள்ளன. இந்நிலையில் இளையான்குடி ரோடு பகுதியில் பஸ் ஸ்டாப் உள்ள சூழலில் முறைப்படுத்தப்படாமல் உள்ளது. இங்கு வாகனங்களை பார்க்கிங் செய்வதுடன் அருகில் வாறுகால் உள்ளதால் மக்கள் நிற்க பயப்படு கின்றனர்.

இதனால் ஐந்து முனை ரோடு பஸ் திரும்பும் இடத்தில் பயணிகள் காத்திருக்கும் நிலை உள்ளது. குறுகலான இடத்தில் எதிர் எதிர் திசையில் பஸ்கள் வரும் போது விபத்து ஏற்படும் நிலை உள்ளது. மேலும் டூவீலர் மற்றும் பாதசாரிகள் நடப்பதற்கு போதிய வழியின்றி டூவீலர் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி ஆக்கிரமிக்கின்றனர்.

எனவே பஸ் பயணிகள் மற்றும் ரோட்டில் செல்வோருக்கு இடையூறு இன்றி பயணம் தொடர போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us