sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தீர்மானம் நிறைவேற்ற கவுன்சிலர் கோரிக்கை

/

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தீர்மானம் நிறைவேற்ற கவுன்சிலர் கோரிக்கை

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தீர்மானம் நிறைவேற்ற கவுன்சிலர் கோரிக்கை

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தீர்மானம் நிறைவேற்ற கவுன்சிலர் கோரிக்கை


ADDED : பிப் 10, 2024 04:38 AM

Google News

ADDED : பிப் 10, 2024 04:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முதுகுளத்துார்: -முதுகுளத்துார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற கவுன்சில் கூட்டத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் அமையவுள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கவுன்சிலர் அர்ஜுனன் கோரிக்கை விடுத்தார்.

முதுகுளத்துார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சில் கூட்டம் ஒன்றிய துணைத்தலைவர் கண்ணகி தலைமையில் நடந்தது. பி.டி.ஓ., ஜானகி முன்னிலை வகித்தார்.

பல்வேறு தீர்மானங்களுக்கு ஒப்புதல் பெறப்பட்டது. விவாதங்கள் வருமாறு:

கலைச்செல்வி: வெண்ணீர்வாய்க்கால் காலனியில் பேவர் பிளாக் சாலை அமைக்கவும், கருங்காலகுறிச்சி கிராமத்தில் போர்வெல் அமைத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட வேண்டும். வெங்கலக்குறிச்சி கிராமத்தில் ரேஷன் கடை, ஆரம்ப துணை சுகாதார நிலையம் அமைக்க வேண்டும்.

அர்ஜுனன்: ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைய இருக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். இந்த ஆண்டு பருவமழை காலத்தில் பெய்த மழையால் மிளகாய், நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி வீணாகிது. எனவே வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும். ஒவ்வொரு ஊராட்சியில் இருந்தும் புத்தக வாசிப்பு திறனை அதிகரிக்க புத்தகக் கண்காட்சிக்கு அழைத்துச் செல்ல வேண்டும். இன்னும் சில மாதங்களில் பதவிக்காலம் முடிய உள்ளதால் கிராமங்களில் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்ய கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்றார்.

மேலும் கவுன்சிலர்கள் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். மேலாளர் சிவகாமி நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us