sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

 ராமநாதபுரம் பகுதியில் தரமற்ற விதைகள்  விற்பனை செய்தால்  நீதிமன்ற நடவடிக்கை : விதை ஆய்வு துணை இயக்குநர் எச்சரிக்கை

/

 ராமநாதபுரம் பகுதியில் தரமற்ற விதைகள்  விற்பனை செய்தால்  நீதிமன்ற நடவடிக்கை : விதை ஆய்வு துணை இயக்குநர் எச்சரிக்கை

 ராமநாதபுரம் பகுதியில் தரமற்ற விதைகள்  விற்பனை செய்தால்  நீதிமன்ற நடவடிக்கை : விதை ஆய்வு துணை இயக்குநர் எச்சரிக்கை

 ராமநாதபுரம் பகுதியில் தரமற்ற விதைகள்  விற்பனை செய்தால்  நீதிமன்ற நடவடிக்கை : விதை ஆய்வு துணை இயக்குநர் எச்சரிக்கை


ADDED : நவ 27, 2025 06:37 AM

Google News

ADDED : நவ 27, 2025 06:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு, தனியார் நிறு வனங்களில் தரமற்ற விதைகள் விற்பனை செய்வது கண்டறியப் பட்டால் அந்நிறுவனம் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என விதை ஆய்வுத் துறை இயக்குநர் இப்ராம்சா தெரிவித்து உள்ளார்.

அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பயிர் சாகுபடிக்குத் தேவையான விதைகள் அரசு, தனியார் நிறுவனங்களில் உற்பத்தி செய்யப்பட்டு பரிந்துரைக்கப்பட்ட பகுதிகளில் விற்கப் படுகிறது. விவசாயி களுக்கு தரமான சான்றளிக்கப்பட்டவிதை வழங்கப்பட வேண்டும்.

மாவட்டங்களில் உள்ள தனியார், அரசு மற்றும் அரசு சார்ந்த விதை உற்பத்தி நிறுவனங்கள், மொத்த விற்பனை நிலையங்கள் மற்றும் சில்லரை விற்பனை நிறுவனங்களில் விதை மாதிரிகள் ஒவ்வொரு விதைக்கும் வயல்களிலும் விதை ஆய்வாளர்களால் எடுக்கப்பட்டு விதைப்பரிசோதனை நிலையங் களுக்கு அனுப்பப் படுகின்றது.

இவ்வகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் சேகரிக்கப்படும் விதை மாதிரிகள் பரமக்குடி விதைப் பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பப்பட்டு விதைகளின் தரம் அறியப்படுகின்றது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 2025--26ம் ஆண்டில் இதுநாள் வரை 624 விதை மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

இவற்றில் தரமற்றவை களாக 19 மாதிரிகள் தெரிய வந்து விதைச்சட்டம் 1966, விதை விதிகள் 1968 மற்றும் விதை (கட்டுப்பாட்டு) ஆணை 1983 அடிப்படையில் 16 நிறு வனங்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் 3 நிறுவனங்கள் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு தெரிவித்து உள்ளார்.






      Dinamalar
      Follow us