/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தணிந்தது சூறாவளி: மீன்பிடிக்க அனுமதி
/
தணிந்தது சூறாவளி: மீன்பிடிக்க அனுமதி
ADDED : அக் 18, 2024 03:20 AM
ராமேஸ்வரம்:-சூறாவளி வேகம் தணிந்ததால் ராமேஸ்வரம் அருகே பாம்பன், மண்டபம் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல அனுமதி டோக்கன் வழங்கப்பட்டது.
வங்க கடலில் உருவான புயல் சின்னத்தால் தமிழக கடலோர மாவட்டங்களில் கடந்த இரு நாட்களாக சூறாவளி வீசி கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டது. இச்சூழலில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்வதில் சிரமம் ஏற்படும் என்பதால் அக்.,15 முதல் பாம்பன், மண்டபம் பகுதியில் உள்ள மீனவர்களும், அக்.,16ல் ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல மீன்வளத்துறையினர் தடை விதித்தனர்.
இந்நிலையில் நேற்று சூறாவளி வேகம் தணிந்ததால் பாம்பன், மண்டபம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல அனுமதி டோக்கன் வழங்கப்பட்டது. இதனால் 280 விசைப்படகில் மீனவர்கள் மீன்பிடிக்க மன்னார் வளைகுடாவுக்கு சென்றனர். நாளை(அக்., 19ல்) ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல உள்ளனர்.