/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சூறாவளி: ராமேஸ்வரம் மீனவர்களுக்கு தடை
/
சூறாவளி: ராமேஸ்வரம் மீனவர்களுக்கு தடை
ADDED : நவ 24, 2025 12:40 AM
ராமேஸ்வரம்: வங்க கடலில் சூறாவளி காற்று வீச உள்ளதால் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத்துறையினர் தடை விதித்தனர்.
வங்கக்கடலில் மணிக்கு 45 முதல் 60 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசி கடலில் கொந்தளிப்பு ஏற்படும் என வானிலை மையம் தெரிவித்தது. இதனால் நேற்று காலை முதல் ராமேஸ்வரத்தில் சூறாவளி காற்று வீசி கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டது. இச்சூழலில் மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றால் சிரமம் ஏற்படும் என்பதால் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் மீனவர்கள் இன்று (நவ., 24) முதல் மறு அறிவிப்பு வரை மீன்பிடிக்க செல்ல மீன்வளத்துறையினர் தடை விதித்தனர்.
இன்று ராமேஸ்வரம் பகுதியில் 1500 விசைப்படகுகள், நாட்டுப்படகுகளை மீனவர்கள் கரையில் நிறுத்தி வைத்து வீடுகளில் முடங்கினர்.

