sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

அரியகுடி புத்துார் கண்மாய் மடைகள் சேதம்

/

அரியகுடி புத்துார் கண்மாய் மடைகள் சேதம்

அரியகுடி புத்துார் கண்மாய் மடைகள் சேதம்

அரியகுடி புத்துார் கண்மாய் மடைகள் சேதம்


ADDED : அக் 03, 2024 04:29 AM

Google News

ADDED : அக் 03, 2024 04:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கவலையில் விவசாயிகள்

பரமக்குடி: பரமக்குடி அருகே போகலுார் ஒன்றியம் அரியகுடி புத்துார் கண்மாய் மடைகள் சேதமடைந்துள்ளதால் விவசாயில்கள் கவலை அடைந்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் வானம் பார்த்த பூமியாக உள்ள நிலையில் கண்மாயில் தேக்கப்படும் நீரை நம்பி பல ஆயிரம் ஏக்கர் விவசாயம் நடக்கிறது.

இந்நிலையில் போகலுார் ஒன்றியம் சத்திரக்குடி அருகே அரியகுடி புத்துார் பெரிய கண்மாய் உள்ளது.

இந்த கண்மாயில் இரண்டு மடைகள் உள்ள நிலையில் சில ஆண்டுகளாக சேதமடைந்துள்ளது. கடந்த ஆண்டு கிராம நிதியிலிருந்து கண்மாயை சீர் செய்த நிலையில் 550 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் பெற்று வருவதாக கிராமத்தினர் கூறுகின்றனர்.

ஆனால் பொதுப்பணித்துறை சார்ந்த இக்கண்மாயில் மடைகள் உடைப்பு குறித்து தெரிவித்தும் எந்த பணிகளும் செய்யாமல் உள்ளனர். இதுகுறித்து விவசாயி பூக்கடப்பு கூறியதாவது:

இந்த பகுதியில் பருவ மழை அல்லது வைகை ஆற்று நீர் வரும் நிலையில் கண்மாய்களில் தேக்க முடியாத நிலை உள்ளது. இதனால் இங்குள்ள 550 ஏக்கர் விவசாய நிலத்தில் தண்ணீர் புகுந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது. வறட்சி காலங்களில் தண்ணீரை தேக்கி பயன்படுத்த முடியாத சூழல் நிலவுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனடியாக விவசாயிகளின் துயர் துடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us