நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழக்கரை கீழக்கரை அருகே தில்லையேந்தல் ஊராட்சி வண்ணாந்தரவை அருகே பயணிகள் நிழற்குடை உள்ளது. 1999ல் கட்டப்பட்ட இந்த நிழற்குடை இடிப்பாடுகளுடன் பயனின்றி உள்ளது. கூரை பூச்சு விழுந்து விபத்து அபாயம் உள்ளதால் பயணிகள் திறந்த வெளியில் நிற்கின்றனர்.
எனவே திருப்புல்லாணி யூனியன் நிர்வாகத்தினர் சேதமடைந்த பயணியர் நிழற்குடையை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

