sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

 பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் பகல் பத்து உற்ஸவம்

/

 பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் பகல் பத்து உற்ஸவம்

 பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் பகல் பத்து உற்ஸவம்

 பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் பகல் பத்து உற்ஸவம்


ADDED : டிச 26, 2025 05:23 AM

Google News

ADDED : டிச 26, 2025 05:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டிச.30 சொர்க்கவாசல் திறப்பு

பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் பகல் பத்து உற்ஸவம் துவங்கி நடக்கும் நிலையில் டிச., 30 அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது.

மதுரை அழகர் கோயிலை போன்று பரமக்குடியில் மூலவராக பரமசுவாமி ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் வீற்றிருக்கிறார். வைகுண்டத்தில் பெருமாள் வடக்கு திசை நோக்கி நித்திய சேவை சாதிக்கிறார். இதன்படி பரமக்குடி வைகை ஆறு படித்துறையில் வடக்கு முகமாக பெருமாள் கோயில் கொண்டுள்ள நிலையில், ஆண்டு முழுவதும் பரமபத வாசல் வழியாகவே பக்தர்கள் சுவாமியை தரிசிக்கும் பாக்கியம் பெற்றுள்ளனர்.

கோயிலில் டிச.20ல் பகல் பத்து உற்ஸவம் துவங்கியது. தினமும் பெருமாள் தாயார் மண்டபத்தில் எழுந்தருளி அங்குள்ள பன்னிரு ஆழ்வார்கள் சன்னதியில் தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து டிச., 29 மாலை 4:00 மணிக்கு மோகினி அவதாரத்தில் உலா வருகிறார். பின்னர் மாலை 6:00 மணிக்கு பரமபத வாசல் நடை அடைக்கப்பட்டு மறுநாள் அதிகாலை 5:00 மணிக்கு வைகுண்ட ஏகாதசி நாளில் பெருமாள் சர்வ அலங்காரத்துடன் அருள்பாலிக்க உள்ளார்.

மேலும் தினமும் அதிகாலை 5:00 மணிக்கு ஆண்டாள் அருளிய திருப்பாவை பாடப்பட்டு வருகிறது. ஏராளமான பக்தர்கள் தரிசித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us