ADDED : நவ 22, 2024 04:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: திருவாடானை அருகே ஆண்டாவூரணியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க கூட்டம் நடந்தது. ராமநாதன் தலைமை வகித்தார்.
மாவட்ட தலைவர் முத்துராமு மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். திருவாடானை தாலுகாவில் தொடர் மழையால் பயிர்கள் மூழ்கி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மங்களக்குடி, புல்லுார் பிர்காக்களில் பயிர்கள் நீரில் மூழ்கி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
எனவே ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என நவ.25ல் திருவாடானை தாலுகா அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.