ADDED : நவ 24, 2025 05:45 AM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை நிர்வாக சீர்கேட்டை கண்டித்து பெரியார் பேரவை, தமிழக மக்கள் முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கம்யூ.,(எம்.எல்) மாநில செயலாளர் யோகேஸ் வரன் தலைமை வகித்தார். இதில் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்காததை கண்டித்து கோஷமிட்டனர்.
