sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

தேவர் குருபூஜை: திறந்தநிலை வாகனங்களில் வர தடை

/

தேவர் குருபூஜை: திறந்தநிலை வாகனங்களில் வர தடை

தேவர் குருபூஜை: திறந்தநிலை வாகனங்களில் வர தடை

தேவர் குருபூஜை: திறந்தநிலை வாகனங்களில் வர தடை


ADDED : அக் 05, 2024 01:29 AM

Google News

ADDED : அக் 05, 2024 01:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழாவிற்கு வாடகை வாகனங்கள், திறந்த நிலை வாகனங்களில் வருவதற்குதடை விதிக்கப்பட்டுள்ளது.

பசும்பொன்னில் அக்.29, 30ல் நடக்கும் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழாதொடர்பான ஆலோசனை கூட்டம் ராமநாதபுரம் கலெக்டர் அலுவகலத்தில் நேற்று நடந்தது. தலைமை வகித்த கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் கூறியதாவது:

மாவட்டத்தில் தற்போதுஅமலில் உள்ள பிரிவு 163(1) தடை உத்திரவின் படிபசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜைவிழாவிற்கு வாடகை வாகனங்கள் மற்றும் டூவீலர்கள், டிராக்டர், ஆட்டோ, சரக்கு வாகனம் ஆகியதிறந்த வெளிவாகனங்களில் வந்து கலந்து கொள்ள அனுமதி இல்லை.

சொந்த நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருப்போர் சம்பந்தப்பட்ட டி.எஸ்.பி., அலுவலகங்களில் வாகன அனுமதிச் சீட்டு பெற வேண்டும். சொந்த வாகனத்தை வாடகைக்குவிடக்கூடாது.

வழித்தடத்தில் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது. பிற மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் அந்தந்தமாவட்டங்களில் முறையான அனுமதி பெற வேண்டும். அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் அக்.,29, 30ல் கமுதிக்கு கூடுதல் பஸ் வசதி செய்து தரப்படும். விதிமுறைகளை அனைவரும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றார்.

எஸ்.பி., சந்தீஷ், மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு உள்ளிட்ட அதிகாரிகள், பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us