/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வெளியூர் பக்தர்கள் அவதி; ராமேஸ்வரம் கோயிலுக்கு இரவு நேரம் பஸ் கட் ; ஆட்டோ, டாக்சிகளில் அதிக கட்டணம் வசூல்
/
வெளியூர் பக்தர்கள் அவதி; ராமேஸ்வரம் கோயிலுக்கு இரவு நேரம் பஸ் கட் ; ஆட்டோ, டாக்சிகளில் அதிக கட்டணம் வசூல்
வெளியூர் பக்தர்கள் அவதி; ராமேஸ்வரம் கோயிலுக்கு இரவு நேரம் பஸ் கட் ; ஆட்டோ, டாக்சிகளில் அதிக கட்டணம் வசூல்
வெளியூர் பக்தர்கள் அவதி; ராமேஸ்வரம் கோயிலுக்கு இரவு நேரம் பஸ் கட் ; ஆட்டோ, டாக்சிகளில் அதிக கட்டணம் வசூல்
ADDED : ஜன 27, 2025 05:01 AM
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு இரவு நேரம் பஸ் போக்குவரத்தை நிறுத்தியதால், வெளியூர் பக்தர்கள் சிரமப்படுகின்றனர். ஆட்டோ, டாக்சிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக வேதனை தெரிவித்துள்ளனர்.
ராமேஸ்வரம் கோயிலுக்கு தினமும் ஏராளமான வட, தென் மாநில பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இவர்கள் அரசு, தனியார் பஸ்சில் ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்டில் வந்திறங்கியதும் அரசு டவுன் பஸ் (கட்டணம் ரூ.10), ஆட்டோவில் ரூ.150 முதல் 200 வரை கொடுத்து கோயிலுக்கு செல்வார்கள்.
இந்நிலையில் இரவு 10:00 மணிக்கு மேல் பஸ்ஸ்டாண்டில் இருந்து அரசு டவுன் பஸ்களை கோயிலுக்கு இயக்குவதில்லை. முன்பு மதுரை, கோவை, திருச்சி, துாத்துக்குடி உள்ளிட்ட வெளியூர்களில் இருந்து வரும் அரசு பஸ்களை கோயில் வாசல் வரை இயக்கினர்.
இந்த நடைமுறையை கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பின்பற்றி வரும் நிலையில் கடந்த ஓராண்டாக வெளியூரில் இருந்து வரும் அரசு பஸ்கள் கோயிலுக்கு செல்லாமல் பக்தர்கள் மற்றும் பயணிகளை பஸ் ஸ்டாண்டில் இறக்கி விடுகின்றனர்.
இதனால் இரவு நேரத்தில் பாதுகாப்பின்றி நிற்கும் பக்தர்கள் கூடுதல் தொகை செலவிட்டு ஆட்டோவில் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. அரசு பஸ்களை மீண்டும் கோயில் வரை இயக்க ஹிந்து அமைப்பினர் பலமுறை வலியுறுத்தியும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை.
இதுகுறித்து வி.எச்.பி., ராமநாதபுரம் மண்டல அமைப்பாளர் ஆ.சரவணன் கூறியதாவது:இரவு நேரபஸ்சை நிறுத்தியது ஏன். இதனால் இரவில் பக்தர்கள் ஆட்டோவுக்கு ரூ. 300 முதல் 500 வரைகொடுக்க வேண்டியுள்ளது.
மேலும் பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளதால் சமூக விரோதிகளால் பக்தர்களுக்கு பிரச்னை ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இரவு 10:00 மணிக்கு மேலும் கோயிலுக்கு பஸ்களை இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.