/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரம் கோயிலில் குவிந்தனர் பக்தர்கள்
/
ராமேஸ்வரம் கோயிலில் குவிந்தனர் பக்தர்கள்
ADDED : அக் 14, 2024 04:40 AM

ராமேஸ்வரம்: விடுமுறை தினத்தை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நேற்று பக்தர்கள் இரண்டு மணிநேரம் வரை காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி என தொடர் விடுமுறையால் நேற்று ராமேஸ்வரம் கோயிலுக்கு தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்தனர்.
முதலில் அக்னி தீர்த்த கடலில் நீராடி விட்டு கோயில் வளாக 22 தீர்த்தங்களில் நீராடினர்.
பின் கோயிலுக்குள் சுவாமி, அம்மன் சன்னதியில் நடந்த பூஜையில் வரிசையில் 2 மணிநேரம் வரை காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் முதல் கோயில் மேலவாசல், ரத வீதி, அக்னி தீர்த்த கடற்கரை வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.