sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

அடைவுத் தேர்வு: ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை இணை இயக்குநர் ஆய்வு

/

அடைவுத் தேர்வு: ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை இணை இயக்குநர் ஆய்வு

அடைவுத் தேர்வு: ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை இணை இயக்குநர் ஆய்வு

அடைவுத் தேர்வு: ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை இணை இயக்குநர் ஆய்வு


ADDED : பிப் 05, 2025 05:01 AM

Google News

ADDED : பிப் 05, 2025 05:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் நடக்கும் அடைவுத் (ஸ்லாஸ்) தேர்வை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் குமார் ஆய்வு செய்தார்.

அரசுப் பள்ளிகளில் படிக்கும் 3, 5, 8ம் வகுப்பு மாணவர்களின் கற்றல் திறனை அளவிடும் வகையில் அடைவு தேர்வுகள் கடந்த மூன்றாண்டுகள் நடக்கிறது. இதன்படி நேற்று (பிப்.4) 3ம் வகுப்பிற்கும், இன்று (பிப்.5) 5ம் வகுப்பு, நாளை (பிப்.6) 8ம் வகுப்பிற்கு தேர்வு நடக்கிறது. இத்தேர்வில் கொள்குறி வினா முறையில் மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு 35 வினாக்கள், ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு 45 வினாக்கள், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு 50 வினாக்களுக்கு பதில் அளிக்கும் வகையில் தேர்வுகள் நடக்கிறது.

ராமநாதபுரம் ஒம்சக்தி நகரில் உள்ள மண்டபம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் துறை இணை இயக்குநர் குமார், அடைவுத் தேர்வை தொடங்கி வைத்தார். பின்னர் மாணவர்களிடம் தேர்வு குறித்தும் தேர்வில் கேட்கப்பட்டுள்ள வினாக்கள் குறித்தும் கேட்டறிந்தார்.தேர்வு முறையை ஆய்வு செய்தார்.

முன்னதாக இணை இயக்குநர் பள்ளியில் மாணவர்களுக்கு காலை உணவு திட்ட உணவை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கியராஜ், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us