/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
151 மையங்களில் வைட்டமின் ஏ திரவம் குழந்தைகளுக்கு வழங்கல்
/
151 மையங்களில் வைட்டமின் ஏ திரவம் குழந்தைகளுக்கு வழங்கல்
151 மையங்களில் வைட்டமின் ஏ திரவம் குழந்தைகளுக்கு வழங்கல்
151 மையங்களில் வைட்டமின் ஏ திரவம் குழந்தைகளுக்கு வழங்கல்
ADDED : அக் 30, 2025 03:47 AM
திருவாடானை: அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் துவங்கியுள்ளது. நவ.,1 வரை நடக்கும் இம்முகாமில் ஆறு மாதம் முதல் 5 வயதுள்ள குழந்தை களுக்கு வழங்கப்படும்.
இது குறித்து சுகாதாரத்துறையினர் கூறியதாவது:
சத்து குறைபாட்டால் குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு, தீவிர சுவாச தொற்று நோயால் மூன்று முதல் 5 வயது குழந்தைகள் அடிக்கடி நோய்வாய்ப்படு கின்றனர்.
இதை தடுக்கும் வகையில் வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம்கள் நடத்தப்படுகின்றன.
திருவாடானை தாலுகாவில் 126 அங்கன்வாடி மையங்கள், ஆறு ஆரம்ப சுகாதார நிலையம், 25 துணை சுகாதார நிலையங்கள் என 151 முகாம்களில் நவ.,1 வரை நடைபெறும்.
இதன்படி 6 முதல் 11 மாதம் வரையுள்ள குழந்தைகளுக்கு 1 மி.லி., 12 மாதம் முதல் 5 வயது வரையுள்ள குழந்தை களுக்கு 2 மி.லி., அளவும் வழங்கப்படும்.
பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கி அவர்களின் உடல் நலனை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றனர்.

