UPDATED : ஜூன் 28, 2026 06:44 PM
ADDED : ஜூன் 28, 2026 06:41 PM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம்:தமிழக அரசு கலை பண்பாட்டுத்துறை சார்பில் ஜவகர் சிறுவர் மன்றம் வாயிலாக சிறுவர்களுக்கான மாவட்ட அளவிலான கலை போட்டிகள் நடந்தது.
சிறுவர்களுக்கு கலை ஆர்வத்தை ஊக்குவிக்க குரலிசை, பரதநாட்டியம், கிராமிய நடனம், ஓவியம் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது. கிராமிய நடனம் போட்டியில் கரகாட்டம், காவடியாட்டம், புரவியாட்டம், காளை ஆட்டம், மயிலாட்டம், கரக்கால் ஆட்டம், ஒயிலாட்டம், புலியாட்டம், தப்பாட்டம் போன்ற கிராமிய நடனங்களில் சிறுவர்கள் பங்கேற்றனர். இதில் முதல் பரிசு பெற்றவர்கள் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர்..
