sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

 வார்டில் சாக்கடை பிரச்னை தி.மு.க., கவுன்சிலர் மறியல்

/

 வார்டில் சாக்கடை பிரச்னை தி.மு.க., கவுன்சிலர் மறியல்

 வார்டில் சாக்கடை பிரச்னை தி.மு.க., கவுன்சிலர் மறியல்

 வார்டில் சாக்கடை பிரச்னை தி.மு.க., கவுன்சிலர் மறியல்


ADDED : நவ 21, 2025 05:04 AM

Google News

ADDED : நவ 21, 2025 05:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகராட்சியில் தனது வார்டிற்கு உட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை பிரச்னைக்கு தீர்வு காணாத அதிகாரிகளை கண்டித்து தி.மு.க., கவுன்சிலர் மக்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டார்.

ராமநாதபுரம் நகராட்சி தலைவராக தி.மு.க.,வை சேர்ந்த கார்மேகம் இருக்கிறார். இங்குள்ள 9வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் நாகராஜன் பொதுமக்களுடன் நேற்று மாலையில் அவரது வார்டிற்கு உட்பட்ட மதுரையார் தெருவில் பாதாள சாக்கடை 24 மணி நேரமும் தெருவில் ஓடுகிறது. புகார் தெரிவித்தும் அதிகாரிகள் அலட்சியமாக உள்ளதாக கூறி சிறிது நேரம் மக்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டார்.

கவுன்சிலர் நாகராஜன் கூறுகையில், பலமுறை புகார் தெரிவித்தும் நகராட்சி அலுவலர்கள் கண்டுகொள்ளவில்லை. 12 நாட்களாக கழிவுநீர் ஓடுகிறது என ஓட்டளித்த மக்கள் வீட்டிற்கு வந்து கேள்வி கேட்கின்றனர். சரியான முறையில் வேலை பார்ப்பது இல்லை. எனது 9 வது வார்டை புறக்கணிக்கின்றனர். கவுன்சிலராக இருந்தும் ஒன்றும் செய்ய முடியாமல் உள்ளது வேதனையாக உள்ளது என்றார்.






      Dinamalar
      Follow us