/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
காய்ந்த மரத்தால் விபத்து அபாயம்
/
காய்ந்த மரத்தால் விபத்து அபாயம்
ADDED : நவ 19, 2025 07:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புல்லாணி: திருப்புல்லாணி தெற்கு ரத வீதியில் உள்ள பழமையான பட்டுப்போன வேப்ப மரத்தால் மக்களுக்கு விபத்து அபாயம் உள்ளது.
திருப்புல்லாணி தெற்கு ரத வீதியில் கோயிலுக்கு சொந்தமான பெரிய தேர் அமைந்துள்ள இடத்திற்கு முன்புறம் பட்டுப்போன நிலையில் வேப்பமரம் உள்ளது.
தற்போது மழை காலம் துவங்கி உள்ள நிலையில் இந்த வேப்ப மரத்தின் மேல் பகுதியில் உயர் அழுத்த மின் ஓயர் செல்கிறது.
கோயில் தெற்கு ரத வீதி வழியாக அரசு டவுன் பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்கிறது. எனவே பொதுமக்களின் நலன் கருதி பட்டுப்போன மரத்தை ஊராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலை துறையினரும் ஒருங்கிணைந்து வெட்டி அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

