ADDED : நவ 19, 2025 07:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் 72வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடந்தது. கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் முன்னிலை வகித்தார். கூட்டுறவு சங்கம் மூலம் 3183 பேருக்கு ரூ.30 கோடியே 90 லட்சம் மதிப்பிலான கடன் உதவிகளும், 21 கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயம் வழங்கப்பட்டது.
எம்.எல்.ஏ.,க்கள் முருகேசன் (பரமக்குடி), கருமாணிக்கம் (திருவாடா னை), மண்டல இணைப்பதிவாளர் ஜினு, இணைப்பதிவாளர் மேலாண்மை இயக்குநர் ராஜலெட்சுமி பங்கேற்றனர்.

