ADDED : பிப் 01, 2025 04:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: -ராமநாதபுரம் மாவட்டத்தில் பணி புரிந்த இரு இன்ஸ்பெக்டர்களுக்கு டி.எஸ்.பி., யாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 83 இன்ஸ்பெக்டர்களுக்கு டி.எஸ்.பி., யாக பதவி உயர்வு வழங்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம் பி.1 போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த பாஸ்கரன் கீழக்கரை டி.எஸ்.பி., யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ராமநாதபுரம் டி.சி.ஆர்.பி., யில் இன்ஸ்பெக்டராக இருந்த சண்முகம் பதவி உயர்வு பெற்று தஞ்சாவூர் கியூ பிரிவு டி.எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார்.