sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

 பரமக்குடி வைகை ஆற்றுப்பகுதியில் முதியவர் கொலை: வாலிபர் கைது

/

 பரமக்குடி வைகை ஆற்றுப்பகுதியில் முதியவர் கொலை: வாலிபர் கைது

 பரமக்குடி வைகை ஆற்றுப்பகுதியில் முதியவர் கொலை: வாலிபர் கைது

 பரமக்குடி வைகை ஆற்றுப்பகுதியில் முதியவர் கொலை: வாலிபர் கைது


ADDED : நவ 19, 2025 07:34 AM

Google News

ADDED : நவ 19, 2025 07:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரமக்குடி: பரமக்குடி வைகை ஆற்றில் முதியவர் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

பரமக்குடி நகராட்சி மஞ்சள்பட்டணம் தென்னந்தோப்பில் கீழகன்னிசேரி கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன் 70, காவலாளியாக வேலை செய்கிறார். நேற்று முன்தினம் மாலை லட்சுமணன் மற்றும் பிரண்டை குளம் வேலு 70, இருவரும் பேசியபடி மணிநகர் ஆர்.டி.ஓ., அலுவலகம் வழியில் பின்புறம் வைகை ஆற்றில் நடந்து சென்றனர்.

அப்போது மர்ம நபர் முதியவர்களை தாக்கிய நிலையில் வேலு சம்பவ இடத்தில் பலியானார். லட்சுமணன் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எமனேஸ்வரம் போலீசார் விசாரித்தனர்.

கொலையில் ஈடுபட்ட என்.வளையனைந்தல் கிராமத்தைச் சேர்ந்த சீமைச்சாமி மகன் அலெக்ஸ்பாண்டி 26, மானாமதுரை பஸ் ஸ்டாண்டில் கைது செய்தனர்.

போலீசார் கூறுகையில், தென்னந்தோப்பு செல்லும் வழியில் இளைஞர் மது அருந்தி உள்ளார். இதை முதியவர்கள் தட்டிக் கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அலெக்ஸ்பாண்டி அவர்களை தாக்கிய நிலையில் வேலு இறந்து விட்டதாக தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us