sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

 ஆங்கில திறன் மேம்பாடு ஆசிரியர்களுக்கு பயிற்சி

/

 ஆங்கில திறன் மேம்பாடு ஆசிரியர்களுக்கு பயிற்சி

 ஆங்கில திறன் மேம்பாடு ஆசிரியர்களுக்கு பயிற்சி

 ஆங்கில திறன் மேம்பாடு ஆசிரியர்களுக்கு பயிற்சி


ADDED : நவ 12, 2025 10:00 PM

Google News

ADDED : நவ 12, 2025 10:00 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கிலத் திறனை மேம்படுத்துவதற்கான மூன்று நாள் பயிற்சியை முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி துவக்கி வைத்தார்.

மாவட்டத்தில் 55 அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கிலத்தில் பிழையின்றி பேசுவதற்கும், உச்சரிப்பதற்கும் மாவட்ட அளவிலான கருத்தரங்கு ராமநாதபுரம் வட்டார வள மையத்தில் நடைபெற்றது. ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட அலுவலர் கணேச பாண்டியன் தலைமை வகித்தார். மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் ரவி முன்னிலை வகித்தார்.

முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி 6 வகையான பயிற்சி கட்டங்களை துவக்கி வைத்து, இதனை மாணவர்களுக்கு கொண்டு செல்ல வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார். பயிற்சியின் முக்கிய அம்சங்களாக வாசித்தல், எழுதுதல், பேசுதல், தகவல் தொடர்பு போன்ற அடிப்படை திறன்களை மாணவர்களுக்கு பள்ளியில் கற்பிப்பதற்காக ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

ஜாலி போனிக்ஸ் நிறுவனம் சார்பில் தீபா ஜோசப் ஆடல் பாடலுடன் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தார். வட்டார கல்வி அலுவலர் சூசை, வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஷோபனா, பயிற்சி ஒருங்கிணைப்பாளர் வேல்சாமி பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us