ADDED : ஜன 13, 2024 01:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கமுதி:முதுகுளத்தூர் அருகே மணலூரைச் சேர்ந்த திருக்கண்ணன் மனைவி வில்லம்மாள் 73, விவசாயம் செய்து வந்தார்.
நேற்று விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள மிளகாய் செடிகளை பார்க்க சென்றார். அப்போது வயலில் அறுந்து கிடந்த உயர்அழுத்த மின்கம்பியை எதிர்பாராதமாக மிதித்த போது வில்லம்மாள் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.