நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதுகுளத்துார்: முதுகுளத்துார் பகுதியில் 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் நெல்லுக்கு அடுத்தபடியாக மிளகாய் விவசாயம் செய்கின்றனர். காத்தாகுளம் கிராமத்தில் மிளகாய் செடிகள் நன்கு வளர்ச்சி அடைந்திருந்தது.
பூப்பூத்து மிளகாய் காய்க்கும் தருவாயில் இருந்த போது இரவு நேரத்தில் காட்டுப் பன்றிகள் கூட்டமாக வந்து பயிர்களை சேதப் படுத்தி உள்ளன.
காட்டுப்பன்றிகளால் மிளகாய் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.அதிகாரிகள் ஆய்வு செய்து இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

