/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
காரங்காட்டில் நிறுத்தப்பட்ட படகு போக்குவரத்து துவக்கம்
/
காரங்காட்டில் நிறுத்தப்பட்ட படகு போக்குவரத்து துவக்கம்
காரங்காட்டில் நிறுத்தப்பட்ட படகு போக்குவரத்து துவக்கம்
காரங்காட்டில் நிறுத்தப்பட்ட படகு போக்குவரத்து துவக்கம்
ADDED : டிச 20, 2024 01:54 AM
தொண்டி:புயல் எச்சரிக்கையால் காரங்காட்டில் நிறுத்தப்பட்ட படகு போக்குவரத்து மீண்டும் துவங்கியது.
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே காரங்காடு கடற்கரை சதுப்பு நிலக்காடுகளை உள்ளடக்கி அமைந்துள்ளது. இயற்கை தந்த கொடையாக அனைவரது மனதை கவரும் வகையில் மாங்குரோவ் காடுகள் அடர்த்தியாக உள்ளன. இப்பகுதி சுற்றுலா தலமாக அறிவிக்கப்பட்டதால் வெளி மாவட்டங்களிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.
சுற்றுலாப் பயணிகளை அழைத்து கடலுக்குள் சென்று சுற்றி காட்டுவதற்காக வனத்துறை சார்பில் படகு சவாரி, கயாக்கிங் எனப்படும் துடுப்பு சவாரி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புயல் எச்சரிக்கையால் டிச.,11 முதல் இங்கு படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
தற்போது வானிலை ஆய்வு மையம் அறிவிப்பால் இப்பகுதியில் புயலுக்கான அறிகுறி இல்லாத நிலையில் நேற்று முதல் படகு போக்குவரத்து துவங்கியது.