/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மாற்றுத்திறனாளிகளின் விபரம் சேகரிக்கும் களப்பணியாளர்கள் இன்று முதல் பணி துவக்கம்
/
மாற்றுத்திறனாளிகளின் விபரம் சேகரிக்கும் களப்பணியாளர்கள் இன்று முதல் பணி துவக்கம்
மாற்றுத்திறனாளிகளின் விபரம் சேகரிக்கும் களப்பணியாளர்கள் இன்று முதல் பணி துவக்கம்
மாற்றுத்திறனாளிகளின் விபரம் சேகரிக்கும் களப்பணியாளர்கள் இன்று முதல் பணி துவக்கம்
ADDED : ஜூலை 10, 2025 02:41 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் முழு விபரம் அடங்கிய சமூக தரவுத்தளத்தை உருவாக்க கணக்கெடுக்க வரும் களப்பணியாளர்களுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது:
மாவட்டத்தில் இல்லம் தோறும் சென்று அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளையும் கண்டறிந்து அவர்களது முழு விவரங்கள் அடங்கிய சமூக தரவுத்தளத்தை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நகர், ஊரகப் பகுதிகளில் சமூக சேவை வழங்கும் நிறுவனங்கள் மூலம் முன்களப்பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு நடத்தி மாற்றுத்திறனாளிகள் குறித்த விவரங்களை சேகரிக்க உள்ளனர்.
இக்கணக்கெடுப்பு பணி இன்று முதல் (ஜீலை 10) துவங்கி செப்., மாத இறுதி வரை நடக்கிறது. இக்கணக்கெடுப்பிற்காக தங்கள் வீடுகளுக்கு வரும் முன்களப் பணியாளர்களுக்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறு கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.