/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
காட்டுப்பன்றி வேட்டைக்கு அபராதம் விதிப்பு
/
காட்டுப்பன்றி வேட்டைக்கு அபராதம் விதிப்பு
ADDED : டிச 05, 2024 11:33 PM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வனத்துறை அலுவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, சந்தேகத்திற்கிடமாக நின்ற டூ - வீலரை சோதனையிட்டனர். அதில், 2 வயது பெண் காட்டுப்பன்றி உயிருடன் கட்டப்பட்டிருந்தது.
சிவகங்கை மாவட்டம் மணலுாரைச் சேர்ந்த பொன்படி, 48, என்பவர், அந்த காட்டுப்பன்றியை இறைச்சிக்காக வலை வைத்து பிடித்தது தெரிய வந்தது.
இதையடுத்து மாவட்ட வன அலுவலர் ஹேமலதா காட்டுப்பன்றியை மீட்டு, பொன்படிக்கு, 15,000 ரூபாய் அபராதம் விதித்தார். காட்டுப்பன்றி வனப்பகுதிக்குள் விடப்பட்டது.
'வனப்பகுதி அல்லது வெளியில் வன உயிரினங்களை வேட்டையாடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.